சிங்கமும் வேடர்களும்
ஒரு காட்டில் சிங்கம் ஒன்று ராஜாவாக இருந்தது. ஒரு நாள் சில வேடர்கள் அங்கே வந்தனர். அவர்களைப் பார்த்ததும் கழுகு உடனே சிங்கத்திடம் தகவல் தெரிவிக்க வந்தது.
“அரசே, சில வேடர்கள் நமது காட்டிற்குள் வந்துள்ளனர். நீங்கள் அவர்களைப் பயமுறுத்தி காட்டை விட்டு விரட்டி வெளியேற்றுங்கள். அல்லது அவர்களைக் கொன்று விடுங்கள்” என்று கழுகு சிங்கத்திடம் சொன்னது.
“இப்பொழுது என்னால் அவர்களைக் கொல்லவும் முடியாது, விரட்டவும் முடியாது. அவர்கள் காட்டை விட்டு போகும்வரை நீங்கள் எல்லோரும் ஒளிந்து கொள்ளுங்கள் என்று சிங்கம் பதிலளித்தது.