நீர்எலி பென் கட்டிய மேடை…
காட்டிலுள்ள சிறிய விலங்குகள் ஒன்றுகூடி ஒரு மேடை கட்டி நாடகம் நடத்தலாம் என்று திட்டமிட்டன.
நாடகத்தைப் பார்க்க பெரிய விலங்குகளை அழைக்கலாம் என்று அவை முடிவெடுத்தன
மான் குட்டி உள்பட அனைத்து சிறிய விலங்குகளுக்கும் நாடகத்தில் நடிக்க வேடம் கொடுக்கப்பட்டது. ஆனால் நீர் எலி குட்டிக்கு எந்த வேடமும் கொடுக்கப்படவில்லை.
“எனக்கு எந்த வேடமும் தரவில்லை” என்று முறையிட்டது நீர் எலி குட்டி.
“உன்னுடைய பற்கள் வாயிலிருந்து வெளியே அசிங்கமாக நீட்டிக் கொண்டிருக்கிறது. அத உனக்கு எந்த வேடமும் கிடையாது” என்று சொன்னது ஓநாய் குட்டி.
அதைக் கேட்ட நீர் எலி குட்டி வருத்தத்துடன் தன்னுடைய வீட்டிற்கு சென்றது.