வேடனும் சிள்வண்டும்
ஒரு நாள் ஒரு வேடன் தன்னுடைய வலையை எடுத்துக் கொண்டு காட்டிற்குள் சென்றான் ஒரு அழகான பறவையைப் பிடித்து அதை சந்தையில் விற்று பணமாக்க அவன் விரும்பினான். நடந்து கொண்டிருந்த வேடன் திடீரென்று பலமான ஒரு சத்தத்ததைக் கேட்டான். ஆஹா, என்ன ஒரு பெரிய சத்தம்! இவ்வளவு பெரிய சத்தம் வருகிறது என்றால் அந்த சத்தம் போடும் பறவை மிகவும் பெரியதாகத்தான் இருக்கும் என்று அந்த வேடன் நினைத்தான்.