
விவசாயியும் நாரையும்…

ஒரு காலத்தில் ஒரு நாரை கொக்குக் குடும்பத்தில் வாழ்ந்து வந்தது. ஒவ்வொரு நாளும் கொக்குகள் அருகிலுள்ள பண்ணைப் பகுதிகளுக்கு பறந்து செல்லும். அங்கு விவசாயிகளின் குளங்களில் உள்ள மீன்களைத் திருடுவது அவற்றின் வழக்கம். நாரையும் அவற்றுடன் பறக்கும். ஆனாலும் அது கொக்குகளுடன் சேர்ந்து திருடுவதில்லை.ஒரு நாள் கொக்குகள் சோளத்தைத் திருட ஒரு விவசாயியின் வயலுக்குப் பறந்தன. வழக்கம் போல நாரையும் கூடவே சென்றது. திருடும் பறவைகளைப் பிடிக்க விவசாயி வலை போட்டிருந்தார் கொக்குகள் தரையில் இறங்கிய போது, அவை வலையில் சிக்கின. அவற்றுடன் நம் நாரையும் பிடிபட்டது.













