
ஒரு நாள் பறவை பிடிப்பவன் காட்டுக்கு வந்தான். வலை விரித்து பல கிளிகளைப் பிடித்தான். அவற்றைக் கூண்டுகளில் அடைத்தான்.
முன்னி மானும் திக்கு மானும் இதைக் கண்டன. உடனே அவை அப்புவைப் பார்க்க விரைந்தன.
“அப்பு, எங்கள் கிளி நண்பர்கள் ஒரு வேட்டைக்காரனால் பிடிபட்டுவிட்டன. அந்த கிளிகளை நாம் காப்பாற்ற வேண்டும்’ என்று அவை அப்புவிடம் கூறின.
அப்பு வேகமாக உயரப் பறந்தது. ‘நான் அவனை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும்” என்று நினைத்தது.

Leave a Reply