சிங்கமும் காட்டு நாய்களும்…
முன்னொரு காலத்தில் ஒரு காட்டில் அடை மழையும், புயலும் வீசியது. ஆறுகள் முழுவதும் நிரம்பி வெள்ளம் கரையைத் தாண்டி ஓடியது. சிறிய விலங்குகள் வெள்ளத்தில் சிக்கி உதவி வேண்டி அபாயக்குரல் எழுப்பின.
அந்த காட்டில் வாழ்ந்த மூன்று காட்டு நாய்கள் வெள்ளத்தில் சிக்கிய சிறிய விலங்குகளைக் காப்பாற்றின. காட்டு நாய்களின் வீரச் செயலை பற்றி கேள்விப்பட்ட சிங்க ராஜா அந்த நாய்களை தன்னுடைய குகைக்கு வரவேற்றது.